07 டிசம்பர் 2020

கண்களை ஆரோக்கியமாக வைக்க ..!

 

தொழில்நுட்ப வளர்ச்சியும், விஞ்ஞானமும் போட்டி போடும் காலம் இது. அந்த வகையில், இந்த நூற்றாண்டின், மிகப் பெரிய கண்டுபிடிப்பு கம்ப்யூட்டர். இன்றைய தினத்தில், மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கைக்கு இணையாக, கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரும் பெருகி விட்டனர். கம்ப்யூட்டரை பயன்படுத்துவது நல்ல விஷயம் தான். ஆனால், அதே நேரத்தில், கம்ப்யூட்டரில் இருந்து வெளிப்படும் கதிர்களிடம் இருந்து, கண்களை பாதுகாத்துக் கொள்வதும் மிக அவசியம். 

தொடர்ச்சியாக கம்ப்யூட்டரை பயன்படுத்துவோர் சந்திக்கும், முதல் பிரச்னை பார்வைக் கோளாறு. தலைவலி, மந்தமான பார்வை, ஒளியை காணும் போது கண் கூசுதல், கண் சிகப்பு அடிக்கடி ஏற்படுதல், கண்வலி, கழுத்து மற்றும் பின் முதுகுவலி, நிறங்கள் மங்கலாக தெரிதல், கண் உலர்ந்து காணப்படுதல், அதோடு கண் எரிச்சல் போன்றவை, கண்களுக்குண்டான பிரச்னைகளை உறுதிப்படுத்தும். இந்த பிரச்னைகளுக்கு, "கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்' என்று பெயர். கம்ப்யூட்டர் பயன்படுத்தும், 80 சதவீதம் பேருக்கு இந்த, "கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்' வர வாய்ப்பு உள்ளது. 

நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளின் நிழலும், கண்ணின் பின்புறம் உள்ள, விழித்திரையில் குவிகிறது. கம்ப்யூட்டரில் உள்ள, "பிக்ஸலை' தொடர்ந்து பார்ப்பதால், இந்த குவிதலில், பிரச்னை ஏற்படுகிறது. கண்ணில் உள்ள ஈரப்பதத்தையும், கண்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனையும், கண்ணீர் பாதுகாக்கிறது. தொடர்ந்து கம்ப்யூட்டரை பார்ப்பதால், கண் சிமிட்டல் குறைந்து, கண் எரிச்சல் மற்றும் கண்கள் உலர்ந்து போதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. 

ஆனால், புத்தகத்தில் உள்ள எழுத்துக்களை பார்க்கும்போது, அதன் தெளிவான தன்மையால், இந்த பிரச்னை வருவதில்லை. கம்ப்யூட்டர் பாதிப்பால் ஏற்படும் தலைவலியை, எப்படி தெரிந்து கொள்வது? பெரும்பாலும் தலைவலி, தலையின் முன் அல்லது பின்பக்கமாகவும். சில நேரம் ஒரு பக்கத் தலைவலியாகவும் வரலாம். குறிப்பிட்ட நேரம் ஓய்வு எடுத்தால், இது சரியாகி விடும். சிறு வயதிலேயே கம்ப்யூட்டரை உபயோகிக்கும் குழந்தைகளுக்கு, கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படுகிறது.

கண்களை ஆரோக்கியமாக வைக்க வழிமுறை :

  •  தினமும் இரவில் படுக்கும் முன் இரண்டு துளிகள் விளக்கெண்ணையை கண்களைச் சுற்றி ஊற்றி சிறிது நேரம் மசாஜ் செய்து வர, கண்கள் பிரகாசமாகவும், பளிச்சென்றும் இருக்கும். 
  • தினமும் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்கள் மீது 10 நிமிடங்கள் வைக்கவும். இதனால் கண்களில் உள்ள சோர்வு மற்றும் கருவளையங்கள் நீங்கும். 
  • உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி தங்கள் மீது வைத்தால் கருவளையம் நீங்கும். கண்களை 3-5 விநாடிகள் இறுக்கமாக மூடிகொண்டும், பின் 3-5 விநாடிகள் திறந்தும் வைத்திருத்தல் வேண்டும். இதனை 7 அல்லது 8 முறை செய்யவும். 
  • தினந்தோறும் சுத்தமான குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவவும். இதனால் கண்கள் ஆரோக்கியமாகவும் கண் சம்பந்தமான நோய் வராமலும் தடுக்கும். 
  • தேநீர் பைகளை உறைவிப்பான் ஒன்றில் வைத்து, சிறிது நேரம் அங்கேயே இருக்க விடுங்கள். குளிர்ந்த தேநீர் பைகளை உங்கள் கண்களில் 15 நிமிடங்கள் வைக்கவும். இது கருவளையங்களை குறைக்க உதவுகிறது. 

கண்களுக்கு ஏற்ற உணவுகள் 

  1. கீரை உணவுகளை வாரம் இரண்டுமுறையாவது சாப்பிடுவது அவசியம் .
  2. மீன் எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் கண்களுக்கு அவசியம். 
  3. வகையான நிறங்களை கொண்ட இயற்கை உணவுகளை அதிகம் சேர்க்களாம் .
  4. முட்டை, வெண்ணெய் வாரம் இரு முறை என சாப்பிடலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக