29 அக்டோபர் 2020

கூந்தல் கருமையாகவும் ,அடர்த்தியாகவும் வளர ....


தேவையான பொருட்கள் :

கருவேப்பில்லை -ஒரு கையளவு

தேங்காய் எண்ணெய் -1/2 லி

கரிசலாங்கண்ணி -ஒரு கையளவு

நெல்லிக்காய் -2

வேப்பில்லை -ஒரு கையளவு

மருதாணி இலை -ஒரு கையளவு

சின்ன வெங்காயம் -5

செம்பருத்தி பூ -10

வெந்தயம் -1 டீஸ்பூன்

ஓமம் -சிறிதளவு

பச்சை கற்பூரம் -1 சிட்டிகை

செய்முறை :

முதலில் ஒரு இரும்பு வாணலியை அடுப்பில் வைகக்கவும் . அதில் தேங்காய் எண்ணையை ஊற்றி சுடக்கவும் . அதில் கருவேப்பில்லை,கரிசலாங்கண்ணி,மருதாணி இலை,வேப்பில்லை,சின்ன வெங்காயம்,செம்பருத்தி பூ,நெல்லிக்காய்முதலியவற்றை ஒன்று ,இரண்டாக அரைத்து அதில் சேர்க்கவும் . பின் வெந்தயம்,ஓமம்,பச்சை கற்பூரம்ஆகியவற்றை சேர்க்கவும் . இவை இவையனைத்தையும் நன்றாக காய்ச்சவும் .எண்ணெய் பிரிந்து மேலெ வரும் வரை காய்ச்சவும் . பின் அடுப்பை அணைத்து எண்ணெயை ஆறவிடவும் . ஆரியபின் வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைக்கவும் . தினமும் இதை பயன் படுத்தி வந்தால் கூந்தல் கருமையாகவும் ,அடர்த்தியாகவும் ,வளரும் .

05 அக்டோபர் 2020

காரைக்குடி நண்டு மசாலா




தேவையான பொருட்கள்:

நண்டு - 1 கிலோ

புளிக்கரைசல் - 1 கப்

பட்டை - 2

பிரியாணி இலை -2

சோம்பு - 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்

வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது)

தக்காளி - 2 (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு...

துருவிய தேங்காய் - 1 கப்

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

கசகசா - 1 டேபிள் ஸ்பூன்

சோம்பு - 1/2 டீஸ்பூன் 
 
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, மிளகு, சீரகம், கசகசா, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். 

அடுத்து நண்டு சேர்த்து, பின் மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து  நன்கு வதக்க வேண்டும். பின் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். இந்நிலையில் நண்டு ஓரளவு வெந்திருக்கும். 

பின்பு அதில் புளிக் கரைசல் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், காரைக்குடி நண்டு மசாலா ரெடி!!!